முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய இடைக்காலத் தலைவராக இருப்பதற்கு நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே குறித்த பதவியில் இருப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தெளிவான தலைமை கிடைத்தப்பின்னர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான இடைக்கால தலைமைக் குழுவை நியமிக்க முன்மொழிந்தார்.
அதற்கு கரு ஜெயசூரியவும் நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.