ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பெலரஷ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆகியோர் மொஸ்கோவில் அடுத்தவாரமளவில் சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளனர் என கிரெம்ளின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
லுகாஷென்கோவிற்கு வெற்றியைக் கொடுத்த சர்ச்சைக்குரிய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதில் இருந்து இரு தலைவர்களும் உத்தியோகப்பூர்வமாக சந்திக்கவில்லை.
இன்று இடமபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, இருவருமே இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவைத்து குறித்து பேசியதாக கூறப்படுகின்றது.
அத்தோடு இதன்போது அடுத்த வாரமளவில் மொஸ்கோவில் ஒரு சந்திப்பை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் கிரெம்ளின் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.