இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (வியாழக்கிழமை) திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் தலமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”கோவிட் 19 இன் தாக்கம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில் இலங்கை இராணுவமானது சிரமங்களை பாராது கடமைகளில் ஈடுபட்டிருந்தது. இதன் காரணமாக நாட்டில் குறித்த நோய்த்தொற்றானது சமூகபரவலடையாது பாதுகாக்க முடிந்தது. அதற்காக நன்றி தெரிவிக்குமுகமாக எனது இந்த விஜயம் அமைந்துள்ளது.
போதைப் பொருள் கொண்டுசெல்லுதல் மற்றும் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக பல வகைகளில் செய்திகள் வெளியாகிறது அவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தண்டனைக்கு உற்படுத்தப்படுவர்” எனவும் அவர் தெரிவித்தார்.