மட்டக்களப்பு வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்னிட்டு முருகப் பெருமானிற்கும் 12சித்தர்களுக்கும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சித்தர்களின் குரல் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற, இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகளில், அகில உலக மஹா சித்தர்களின் குரல் அறக்கட்டளையின் ஆலோசகரும், காசி இந்து பல்கலைக்கழக வேத ஆச்சாரியாருமகிய ஸ்ரீலஸ்ரீ சிவ சங்கர் குருஜி மற்றும் வேல்சாமி ஆகியோரும் நிருவாக சபையினரும் கலந்து கொண்டனர்.
3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமிருந்த அற்புதமான சித்தர்களின் தவ பூமியாக மட்டக்களப்பு பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.