Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கண்டியில் பெண்ணுக்கு கொரோனா! பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வீடு சென்றுள்ளார்

கண்டியில் பெண்ணுக்கு கொரோனா! பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வீடு சென்றுள்ளார்

1 minutes read

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்த பெண் ஒருவர் அண்மையில் தனது சொந்த ஊரான கண்டிக்கு திரும்பிய நிலையில்,

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி – கலஹா லெவலன் தோட்டத்தில் வசிக்கும் குறித்த பெண் அண்மையில் பொதுப் போக்குவரத்தில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வீடு திரும்பிய அவர் கண்டியில் உள்ள சில கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்ததுடன் நகரிலிருந்து முச்சக்கர வண்டி ஊடாக தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் அவருக்கு கண்டி வைத்தியசாலையில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் பயணம் செய்த முச்சக்கர வண்டி சாரதி தனிமைப்படுத்தப்பட்டதுடன், பொருட்கள் வாங்கிய கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More