கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியிலுள்ள கிணறொன்றில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) மாலை, இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தர்மபுரம் பகுதியை சேர்ந்த 18வயதான பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவன் தவறி விழுந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.