Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை NB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு

NB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு

1 minutes read

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், இ.போ.ச பேருந்தில் பயணித்து மறைந்திருந்த ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் ஒருவர், கொழும்பிலிருந்து பதுளை சென்ற இ.போ.ச பேருந்தில் பயணம் செய்து,

பதுளை ஹாலிஎல பகுதியிலுள்ள ரெசட் பெருந்தோட்டத்தில் மறைந்திருந்த நிலையில் நேற்று கைதானார்.

அவர் பொலன்னறுவ, அரலகன்வில தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த மாதம் 23 ஆம் திகதி தாங்கம டிப்போவுக்கு சொந்தமான என்.பி 9017 கொழும்பு-பதுளை பேருந்தில்,

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு ஹாலி எலவை வந்தடைந்தார். இந்த பேருந்தில் பயணித்தவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் கோருகின்றனர்.

ஹாலி எலவில் உள்ள மதுபான கடையொன்றிற்கு அவர் சென்றதால் அது மூடப்பட்டு, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More