மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
குறித்த விசாரணை அறிக்கையை 2 மாத காலப்பகுதியினுள் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்றினால் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நோயாளிகள் விரைவில் மாவட்டத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உள்ள பிற ஆடைத் தொழிற்சாலைகளுக்கும் பரவியுள்ளன, அதே நேரத்தில் இது மற்றொரு கொத்தணி பேலியகொட மீன் சந்தையின் தோற்றத்திற்கும் வழிவகுத்தது என்று நம்பப்படுகிறது