Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

1 minutes read

ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் நாட்டின் பல பகுதிகளில் கண்டறிப்பட்டுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி சென்ற அவர்கள் கண்டறியப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் பணடரவளை, மட்டக்களப்பு, அம்பாறை, தங்காலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தை விட்டு வௌியேறியவர்கள் சுய தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என அஜித் ரோஹண இன்று காலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More