Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 21அகவை இளைஞன் திடீர் மரணம்!

21அகவை இளைஞன் திடீர் மரணம்!

0 minutes read

புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞர் 21 ஆவது வயதில் இன்று 11.11.2020 புதன்கிழமை காலமானார். (இவரது தாயார் பலாலி கிழக்கை சேர்ந்த பொன்னம்பலத்தின் மகள் சிவதேவி ) 18.05.1999 இல் பிறந்த இவர் வயாவிளான் மத்திய கல்லூரியின் 2018 ஆம் ஆண்டு உயர்தர தொழிநுட்ப பிரிவு மாணவராவார். தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் (ஆயக்கடவை பிள்ளையாருக்கு முன்னுள்ள வீதி, பாடசாலைக்கு அருகாமை வீதி) உள்ள அன்னாரின் வீட்டில் நாளை 12.11.2020 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெற்று நண்பகல் 12 மணிக்கு புன்னாலைக்கட்டுவன் இந்துமயானத்திற்கு பூதவுடல் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இளைஞனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More