பலாலி- அன்ரனிபுர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 2எறிகணை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பலாலி அன்ரனிபுர பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட எறிகனை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அண்டனிபுரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்யும்போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார். பின்னர் உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார்
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர்.
மேலும், மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழப்பதற்காக வட்டுக்கோட்டைப் பகுதியிலுள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.