Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று

திருவையாறு மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் தொற்று

1 minutes read

கிளிநொச்சி திருவையாறில் கடந்த இரு வாரங்களுக்கு முன்  இடம்பெற்ற தாயின்
மரண வீட்டிற்கு கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவிலிருந்து வந்த பெண்ணுக்கு
அன்றே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது கணவருக்கு இரண்டாவது
பிசிஆர் பிரிசோதனையில் நேற்றிரவு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தபட்ட நிலையில்  அவரது
கணவருக்கும் இரண்டுவாரங்களுக்கு  முன் பிசிஆர் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டபோது தொற்றில்லை என முடிவுகள் வெளிவந்திருந்தன. ஆனால் 14
நாட்களுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது
நேற்றிரவு உறுதிசெய்யப்பட்டுள்ளது. முல்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட
பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மரண வீட்டுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 20 மேலும்
14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இக் குடும்பங்களுக்கு மனிதாபினமான உதவிகள்
தேவைப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More