கற்பகா திட்டம்-17ஆவது நிகழ்வாக இன்றைய தினம் அக்கராயன் குளத்தின் பிரதான கால்வாய் ஓரம் ஸ்கந்தபுரம் நோக்கி 1200 தேக்கு மரங்கள் நாட்டும் செயற்றிட்டத்தின் தொடர்ச்சி இடம்பெற்றது.
இன்று காலை 7.00 மணிக்கு இந்த நிகழ்வு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி வனவள பணிப்பாளர். சேனநாயக்கா Rdhs ஶ்ரீ.சரவணபவன், அக்கராயன் வைத்தியசாலை மருத்துவர் ராகுலன், Dr.சத்தியமூர்த்தி, Dr.தவராசா, அதிபர்.மதுரநாயகம், அதிபர்.பங்கையற்செல்வன், அக்கராயன் நாகதம்பிரான் கமக்கார அமைப்பு உறுப்பினர்கள், வைத்தியசாலை தாதியர்கள், உத்தியோகத்தர்கள் பங்கு கொண்டனர்.
கிளி பீப்பிள் அமைப்பு மற்றும் கிளிநொச்சி சமூகப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.