Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் பாராதியார் சிலை திறப்பு

மட்டக்களப்பில் பாராதியார் சிலை திறப்பு

1 minutes read
மட்டக்களப்பில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது  | Athavan News

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரின் திருவுருவச்சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பாடுமீன் அரிமா லயன்ஸ் கழகத்தினால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலை மட்டக்களப்பு – ஊறணியில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகத்தின் தலைவர் இ.மு.றுஸ்வின் தலைமையின் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியகஸ்தர் – சுஜீவ விஜயசேர மற்றும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இவ் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்காகு பாராதியாரின் கவிதைத்தொகுப்படங்கிய நூல் வழங்கி வைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் அதிதிகளால் சின்னம் சூடியும் கௌரவிக்கப்பட்டனர்.

மகாகவி பாரதியின் 138வது ஜனன தினத்தை யொட்டி மட்டக்களப்பில் பாரதியார் சிலை  திறப்புவிழா – சுபீட்சம் – Supeedsam

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More