Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஒருவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஒருவர் கைது

1 minutes read

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டு வளாகத்தில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் நேற்றிரவு (10) கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை எட்டாம் கொலனி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவருகிறது.

தம்பலகாமம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரது வீட்டைச் சோதனையிட்ட போது வீட்டு வளாகத்தில் நான்கு அடி உயரமான கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More