Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா | மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா | மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி

1 minutes read

அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும், ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மேற்படி கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முன்னதாக தரம் 9  இல் கல்வி பயின்று வந்த மாணவர் ஒருவருக்கு கடந்த வாரம் தொற்று உறுதியானதையடுத்து, அவரது வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் முதற்கட்டமாக 7 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் அறிக்கைகளின் பிரகாரம் அவர்கள் அனைவருக்கும் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஏனைய மாணவர்களுக்கான பரிசோதனை அறிக்கைகள் இது வரை கிடைக்கப்பெறவில்லை. இதேவேளை, தொற்று உறுதியான இரண்டு மாணவர்களின் சகோதரர்கள் இருவருக்கும் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அதே பிரதேசத்தின்  மற்றுமொரு பாடசாலையில்  கல்வி கற்று வருபவர்களாவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More