Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு!

1 minutes read

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான மறைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 15 மாத காலப்பகுதியில் 450 இற்கும் மேற்பட்டவர்களிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, சுமார் ஒரு லட்சம் பக்கங்களைகொண்டதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அச்சிடுவதற்கு சுமார் 10 மில்லியன் ரூபாய் செலவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More