கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி, அதனால் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் முகநூலில் எழுதிய பதிவு இதோ
“தடுப்பூசி போட்டுவிட்டார்கள். இரண்டு நாட்கள் கடந்து விட்டன. காய்ச்சல் தலையிடி ஏதும் எனக்கு வரவில்லை.
நேற்று ஊசி ஏற்றிய பகுதியில் சிறிய வீக்கமும் ஏற்பட்டதை தவிர வேறு ஒன்றுமில்லை.
சிலருக்கு காய்ச்சல் வந்ததாக அறிககின்றேன். சிறிய குழந்தைகளுக்கு ஏனைய தடுப்பூசி போடுகின்ற போது இவ்வாறு காய்ச்சல் ஏற்படுவது வழமை. ஆகவே இதை சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
விரைவில் உங்களுக்கு தடுப்பூசி ஏற்றும் சந்தர்ப்பம் வருகின்ற போது தயக்கமின்றி தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்…“ என்று அப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.