Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியாவில் கைதுசெய்யப்பட்டார் முக்கிய சூத்திரதாரி

இந்தியாவில் கைதுசெய்யப்பட்டார் முக்கிய சூத்திரதாரி

1 minutes read

2017 மே 09 ஆம் திகதி பிலியந்தல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காகச் சென்றிருந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பின் பிரிவின் அதிகாரிகள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்ததுடன், மேலும் இரு பொலிஸார் காயமடைந்திருந்தனர்.

அது மாத்திரமன்றி அந்த வழியாகச் சென்ற மூன்று சிறுவர்களும் காயமடைந்ததுடன், 11 வயது சிறுவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந் நிலையிலேயே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மொஹமட் மஹில் மொஹமட் நவாஸ் என்ற சந்தேக நபர் சில வாரங்களுக்கு முன்பு மதுரை போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய இன்டர்போல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More