0
இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 511 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த வைரஸ் தொற்றினால் உடுவில், ஹொரபே, அக்குறணை மற்றும் ராகமை ஆகிய பகுதிகளை சேர்ந்த நால்வரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நேற்று புதிதாக 288பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 86,343 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.