யாழ். மாநகர மேயர் சட்டத்திரணி மணிவண்ணனின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் தனது டுவிட்டரில் யாழ். மாநகர மேயரின் கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், “யாழ். மாநகர மேயரின் கைது கவலைக்குரியது . அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தை பாதுகாக்கும் அதேநேரத்தில், இறுக்கமான சட்ட விதிமுறைகளே (நீதித்துறை பாதுகாப்புகளுடன் ) பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழியாகும்.”
என்று அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.