Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றில் சடலமொன்று கண்டெடுப்பு!

மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றில் சடலமொன்று கண்டெடுப்பு!

1 minutes read

மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றுவாய் ஆற்றில் ஆணொருவரின் சடலம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு- பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் (28 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர், மட்டி எடுப்பதற்காக முகத்துவாரம் ஆற்றுவாய் ஆற்றிற்கு நேற்று சென்றுள்ளார். இதன்போதே ஆற்று நீரில் மூழ்கி அவர் காணாமல் போயுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரை தேடும் பணியினை அப்பிரதேச மக்களும் படையினரும் தொடந்து முன்னெடுத்து வந்த நிலையில், இன்று காலை ஆற்று நீரில் மூழ்கிய நிலையில் அவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More