Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு!

1 minutes read

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகிய கூட்டம் மதியம் 1 மணிவரை இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள், எல்லோரையும் அரவணைத்து போகின்ற நிலைமையை கையாளுகின்ற ஒரு செயற்பாட்டை செய்வதற்கு முற்றுமுழுதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பாக நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆராயப்படும்.

இதேவேளை எங்களுடைய இனம் சார்ந்த பூர்வீகத்தை உடைத்தெறிந்து வரலாற்றை சிதைக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கான பலத்தை உருவாக்குவதற்கு பலமான சக்தியாக தமிழ்த் தரப்பு இருக்கவேண்டும்.

அப்பொழுதுதான், புலம்பெயர்ந்த உறவுகள் மற்றும் தமிழ்நாட்டு தமிழர்கள் ஆகியோரை இணைத்து செயற்படும்போது பெரிய பலத்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும்.

அதனூடாக தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பல விடயங்களை தடுத்து நிறுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More