மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள், துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை), மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தலைமையில் மாமாங்கம் சதா சகாயமாதா ஆலயத்திலும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் தற்போது இடம்பெறுகின்றன.
இதில் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிச்செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.