Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைதான 62 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைதான 62 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

1 minutes read

குறித்த வழக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும், வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் இன்று விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள் அனைவரும், கடந்த காலங்களில் அம்பாறை காத்தான்குடி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேகநபர்களதும், விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை அடுத்த வழக்கு தவணையை செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை , உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

குறித்த சந்தேகநபர்கள் அனைவரும், கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்களை பார்வையிடுவதற்காக அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நீதிமன்ற வாசலில் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More