Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன!

மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன!

2 minutes read

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் படி நான்கு நிலைகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Prof. Kapila Perera) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

அந்த வகையில், 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3,884 பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரை முதல் கட்டத்தில் தொடங்கும் என்று பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி தேவையில்லை என்பதால், தரம் 1 முதல் 5 வரை பாடசாலைகளை திறப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

“இது வரை, எந்த நாடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை அடையாளம் காணவில்லை அல்லது கட்டாயப்படுத்தவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டனர்,

அத்தகைய வெளிப்பாடு தங்கள் குழந்தை மற்றும் பிற குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அமைச்சகங்களின் அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், 12 முதல் 15 மற்றும் 16-19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி எப்போது தொடங்குகிறது மற்றும் எந்த குழுவிற்கு ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி அளிக்கப்படும் என்பதைப் பொறுத்து, தரம் 6 முதல் 13 வரையான பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தொடங்கும் எனவும், சுகாதார பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலைகள் திறக்கும் திகதிகள் அறிவிக்கப்படும்.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து நிலைமை குறித்து விவாதித்ததாகவும் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலை மேம்பாட்டுக் குழுக்கள், சமூக காவல்துறை, பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலைகளை சுத்தம் செய்யத் தொடங்குவார்கள்,

பாடசாலைகளின் சுகாதாரத்தை உறுதிசெய்த பிறகு, பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.

எவ்வாறாயினும், 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 5,131 பாடசாலைகள் நாடு முழுவதும் உள்ளதாகவும், இந்தப் பாடசாலைகள் தான் முதலில் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலர் பாடசாலை முதல் தரம் 5 வரை வகுப்புகள் நடத்தும் 3,884 பாடசாலைகள் உள்ளன என்றும், இந்த பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு கல்வி மண்டலத்திலிருந்தும் நூறு குழந்தைகள் நல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More