ஆசிரியர்கள் – அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான கலந்துரையாடலை நாளைய தினம் பிரதமர் மற்றும் ஆசிரியர்கள் -அதிபர்கள் தொழிற்சாங்கங்களுக்கு இடையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஒவ்வொரு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளுமாறு கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கலந்துரையாடல்கள் நிலவும் இழுபறிகளுக்கு சாதகமாக முடிவுகளை தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமருடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என நம்புவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.