Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதாக 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதாக 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

1 minutes read

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 81,034. நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 உள் நுழையும் மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகளில் நேற்றைய தினம் மொத்தமாக  1,907 வாகனங்களில் பயணித்த 3,149 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் உரிய காரணமின்றி மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 208 வாகனங்களில் பயணித்த 415 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More