Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

இலங்கையில் யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

1 minutes read

இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர்.

உலகளாவிய ரீதியில் யுத்தத்தின் போது உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் உலக பொப்பி மலர் தினம் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியாகும்.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக உலக பொப்பி மலர் தினத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மிகவும் எளிமையான முறையில் கொண்டாடுவதற்கு இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

பொப்பி மலர் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் பிரதானமாக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.

இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட வருடாந்த சஞ்சிகையான “Veteran” இதன்போது அச்சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உபுல் பெரேரா அவர்களினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரனாண்டோ, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உபுல் பெரேரா, உப தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) மஹிந்த அம்பன்பொல் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More