யாழ்ப்பாணத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையிலேயே இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.
அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் நேற்று கட்டைக்காட்டில் உருக்குலைந்த நிலையில் மேலும் ஒரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த சடலம் தொடர்பில் மீனவர்களால் கிராம சேவகர் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.