Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை கொண்டு வரப்படவுள்ளது !

இலங்கைக்கு பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை கொண்டு வரப்படவுள்ளது !

1 minutes read

பாகிஸ்தான் – சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட இலங்கையினைச் சேர்ந்த பிரியந்த குமாரவின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நாளை(திங்கட்கிழமை) குறித்த சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான செலவை ஏற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More