Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விரைவில் புதிய அரசாங்கம் | உதய கம்மன்பில

விரைவில் புதிய அரசாங்கம் | உதய கம்மன்பில

1 minutes read

113ஐ நீக்கி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; இடைக்கால அரசாங்கம்; பொதுத்தேர்தல் -உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்தத் தேர்தலில் மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று மக்கள் எதிர்நோக்கும் கடும் சிரமங்களி னால் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்காமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More