Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியாவில் இருந்து சலுகை விலையில் அரிசி

இந்தியாவில் இருந்து சலுகை விலையில் அரிசி

1 minutes read

இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் வழங்க நடவடிக்கை -வர்த்தக அமைச்சு

இந்தியாவிலிருந்து மேலதிக கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் இருப்பு அடுத்த வாரம் வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாடு, சம்பா மற்றும் வெள்ளைப் பச்சை அரிசி உள்ளிட்ட 40,000 மெட்ரிக்தொன் அரிசி சலுகை விலையில் விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையை செயற்கையாக உயர்த்தி சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள் என நம்புவதாகவும், சலுகை அரிசி விநியோகத்தின் மூலம் இந்த நிலைமையை எதிர்த்துப் போராட முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் முறையான முறையில் அரிசியை இறக்குமதி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More