சதொச விற்பனை நிலையங்களூடாக சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா 05 அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 05 கிலோ நாட்டரிசி, 05 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால் மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன இப் பொதியில் உள்ளடங்குகின்றன. இந்த நிவாரணப் பொதி 1,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 05 பொருட்களின் கொள்முதல் விலையை விட நுகர்வோர் 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளர்து.
இந்தப் புத்தாண்டு நிவாரணப் பொதி இன்று (9) முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்களினூடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.