இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின் தீவிரமடைந்து பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாது போகும் நிலை உருவாகலாம் எனவும், இதனால் ஜுன் மாதமளவில் தனியார் துறைகள் மூடப்படலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு மே மாதத்தின் பின்னர் பணம் இல்லாது போகும். ஜுன் மாதமளவில் தனியார் துறைகளும் மூடப்படலாம். அவர்களிடமும் பணம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.