0
வென்னப்புவ, தம்பரவிலவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் வாகனத்தோடு காத்திருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது..
நீர்கொழும்பு கொச்சிக்கடை போருதொட்டப் பகுதியைச் சேர்ந்த மொஹமட் ஜெஸ்மின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.