பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நேற்று முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகள் என்பவற்றைத் தவிர பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லையென கடந்த 18 ஆம் திகதி சுகாதார அமைச்சர் பேராசியர் சன்ன ஜயசுமன அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
எனினும், தற்போது நாட்டில் பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் பாரிய பொதுக்கூட்டங்களை கருத்திற்கொண்டு பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை எனும் முடிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.