Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் | வெறிச்சோடின பல நகரங்கள் | மக்களின் இயல்புநிலை பாதிப்பு

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் | வெறிச்சோடின பல நகரங்கள் | மக்களின் இயல்புநிலை பாதிப்பு

1 minutes read

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம், சுகாதார சேவை சங்கம், துறைமுக சங்கம், அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவை சங்கம், வைத்திய ஆய்வு கூட நிபுணர் சங்கம், மின்சாரம், புகையிரதம், பெற்றோலியம், தபால் மற்றும் தோட்டத் தொழிற்துறை சங்கம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை (28 ) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதடைந்துள்ள நிலையில், நாட்டின் பல நகரங்கள் மக்கள் நடமாட்டமற்று வெறிச்சோடிக்காணப்படுகின்றன. அத்துடன் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. பெரும்பாலான பாடசாலை செயற்பாடுகள் முடங்கியுள்ளன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றுவருவதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

கொழும்பு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து எவ்வித ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றன. போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்பட்டன. அத்துடன் பாடசாலை செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில், ஒரு சில பாடசாலை செயற்பாடுகள் இடம்பெற்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More