Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ராஜபக்சவினர் என்னை தோற்டிக்க பிரபாகரனுடன் உடன்பாடுகளை செய்தனர் | ரணில்

ராஜபக்சவினர் என்னை தோற்டிக்க பிரபாகரனுடன் உடன்பாடுகளை செய்தனர் | ரணில்

2 minutes read

ஒரு போதும் தான் ராஜபக்சவினருடன் இருந்ததில்லை எனவும் எனினும் ராஜபக்சவினர் தன்னை தோற்கடிக்க பிரபாகரனுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டனர் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நான் ராஜபக்ச அணியில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் ராசமாணிக்கம் தவறான கருத்தை தெரிவித்துள்ளார்.

நான், ராஜபக்சவினருடன் இருக்கவில்லை, சாணாக்கியன் மகிந்த ராஜபக்சவிடம் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் நேற்று என்னை பற்றி தவறான கருத்தை வெளியிட்டிருந்தார். நான் ராஜபக்ச அணியில் இருப்பதாக கூறியிருந்தார்.

நான் எப்போது ராஜபக்சவினருடன் இருந்ததில்லை. ராஜபக்சவினர், என்னை தோற்டிக்க பிரபாகரனுடன் உடன்பாடுகளை செய்தனர்.

ராசமாணிக்கம் பற்றி நான் இங்கு கூற வேண்டும் 2013 பெப்ரவரி 21 ஆம் திகதி அவர், மகிந்த ராஜபக்சவிடம் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொண்டார். அந்த நியமனக் கடிதத்தை நான் வாசிக்கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்களாக ராசபுத்திரன் ராசமாணிக்கம் மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் புதிய அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன்.

நான் ராஜபக்சவினரிடம் சென்றதில்லை. எனினும் ராசமாணிக்கத்திற்கு மகிந்த சரணம் கச்சாமி, பசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி என்ற துதிப்பாட தெரிந்திருக்கலாம். நான் அப்படி செய்ததில்லை என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் ராசமாணிக்கம் நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே முன்னாள் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித் தனியாக சந்தித்து, ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை பிரதி சபாநாயகராக தெரிவு செய்ய ஆதரவு வழங்குவோம் எனக் கூறியதாக சாணாக்கியன் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் வழங்கிய ரணில், நான் ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இருந்ததில்லை. ஆனால் என்னைத் தோற்கடிக்க விடுதலைப் புலிகளின் தலைவர், பிரபாகரனுடன் ராஜபக்சவினர் “அளவளாவினர்” என்றும் இதன் போது ரணில் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More