Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

1 minutes read

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சைக்கிளில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துக்களில் 96 சைக்கிள் செலுத்தியவர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இரவு நேரங்களில் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் மின் விளக்குகளை ஒளிரச் செய்து கொண்டு பயணம் செய்யுமாறு கோரியுள்ளார்.

கோரிக்கை

சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கடுமையான நிறத்தை உடைய உடைகளை இரவில் அணிந்து பயணம் செய்ய வேண்டாம் எனவும் நீதி சமிக்ஞைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் சைக்கிள்களை பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More