மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றைய தினம் நடைபெற்றுள்ள செய்தியாளர் மாநாட்டின் போது எதிர்வரும் இரு மாதங்களில் 10 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, 40,000 மெற்றிக் தொன் கொண்ட டீசல் கப்பல் ஜூலை 8 அல்லது 9 ஆம் திகதி இலங்கைக்கு வரும். மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஜுன் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளது.
கடந்த 30ஆம் திகதி இந்த எரிபொருள் கப்பலுக்காக 28 மில்லியன் டொலர்கள் முன்பணமாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 49 மில்லியன் டாலர்கள் பணம் வைப்பு செய்யப்பட உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக 5 கப்பல்கள் வர உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜுலை 15-, 17 க்கு இடையில் ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் மற்றொரு டீசல் கப்பல் வர உள்ளது.
ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முதலாவது பெற்றோல் கப்பல் ஜுலை 22ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளது.
மலேசியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையை நிவர்த்திக்கும் வகையில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எரிசக்தி, மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க எதிர்வரும் 8 அல்லது 9ஆம் திகதியில் ஒரு டீசல் கப்பலும் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 11 மற்றும் 14ஆம் திகதிகளில் மேலும் இரு எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.