450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 190 ரூபாவாக அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.