Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேசிய எரிபொருள் அட்டை எரிபொருள் விநியோகத் திட்டம்

தேசிய எரிபொருள் அட்டை எரிபொருள் விநியோகத் திட்டம்

1 minutes read

தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) மூலமான எரிபொருள் விநியோகத் திட்டம், எதிர்வரும் ஜூலை 21 முதல் 24 வரை கொழும்பின் பல இடங்களில் பரீட்சார்த்தமாக இடம்பெறவுள்ளதாக, மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

QR மூலமான எரிபொருள் விநியோக சோதனை ஜூலை 21 – 24 வரை பரீட்சிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்திற்கு அமைய மேற்கொள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம்

  • 0,1,2 – செவ்வாய், சனி
  • 3,4,5 – வியாழன், ஞாயிறு
  • 6,7,8,9 – திங்கள், புதன், வெள்ளி

ஆகிய தினங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது

இந்நடைமுறைகள் ஜூலை 25 முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று (19) பி.ப. 4.00 மணி வரை ‘தேசிய எரிபொருள் அட்டை’ (fuelpass.gov.lk) பதிவை மேற்கொண்டவர்கள் தொகை 2 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More