0
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) அறிமுகப்படுத்தப்பட்டதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று இரவு முதல் தங்கள் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளன.
அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைகள் 2.5 சதவீதம் உயர்த்தப்போவதாகதொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
புதிய கட்டணங்கள் அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.