தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதற்கு பதிலீட்டு நாளாக அக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.