Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ் இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

1 minutes read

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ் இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தெரியாத நபர்களினால்கண்ணாடி  போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

யாப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ் இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று காலை யாழ் இந்திய துணை தூதுவரினால் யாழ்ப்பாண பொலிசாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,

குறித்த விடயம் தொடர்பில் யாழ்இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் வாய் முறைப்பாடு பெற்றுக் கொள்ளப்பட்டதோடு குறித்த சம்பவம் தொடர்பில் தூதரகத்தின் பாதுகாப்பு கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டதன் அடிப்படையில் நேற்று இரவு 9 மணி அளவில் கார் ஒன்றில் வந்தவர்களால் குறித்த கண்ணாடி ரக கிளாஸ் தூதரத்தின் வாசல் பகுதி நோக்கி வீசப்பட்ட நிலையில் கார் வேகமாக செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.  தாக்குதல் சம்பவம்  தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More