Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலையில் ‘மாவீரர் வாரம்’ ஆரம்பம்

யாழ். பல்கலையில் ‘மாவீரர் வாரம்’ ஆரம்பம்

0 minutes read

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது உயிர்களைத் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி வரை அஞ்சலி நிகழ்வை முன்னெடுப்பதற்கான ஏற்பாடு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச் சுற்றி சிவப்பு, மஞ்சள் நிறத்திலான வர்ணக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More