கொழும்பில் தற்போது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் பத்தரமுல்லை வழியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில் நுழையா வண்ணம் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முற்படுகின்றனர்.
பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.