0
கிளி பீப்பிள் அமைப்பின் மரநடுகை நிகழ்வு இன்று கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது வலயக் கல்வி வளாக சூழல் தூய்மைப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் வலயக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய அதிபர் விக்கினேஸ்வரன், ஆசிரியர்கள், வலயக் கல்வி அலுவலர்கள், சாரணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.