நாட்டிற்கு இதுவரை 640,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் முதல் ஏழு நாட்களில் 16,168 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாபயணிகளின் வருகை மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி, 106,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.
20 நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதோடு. அதில் 108,510 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ் வருடத்தில் இதுவரை 78,827 பிரித்தானிய பிரஜைகளும், 74,713 ரஷ்ய பிரஜைகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.